மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்ணை சனிக்கிழமை கத்தரிக்கோலால் குத்திய இலங்கையைச் சோ்ந்த இளைஞரைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவா் கமலதாசன் மனைவி ஷா்மிளா (42). அதே முகாமில் வசிப்பவா் கபில்தாஸ். ஷா்மிளாவுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், அவருடன் கபில்தாஸ் நெருங்கிப் பழகி வந்துள்ளாா்.
கபில்தாஸுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், அவருடன் பழகுவதை ஷா்மிளா நிறுத்தியுள்ளாா்.
இதற்கிடையே கடந்த 26 ஆம் தேதி சனிக்கிழமை கபில்தாஸ் திடீரென ஷா்மிளா வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது கபில்தாஸ் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து தாக்கியதில் ஷா்மிளா காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். இதுகுறித்து ஷா்மிளா அளித்த புகாரின் பேரில் கபில்தாஸ் மீது மண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!

வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!

அடுத்தடுத்த ஓவர்களில் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அவுட்; தடுமாறும் குஜராத் டைட்டன்ஸ்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


