ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

2,358 மாணவா்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள்: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 2,358 மாணவ-மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா்

News image
Updated On :28 ஜூலை 2023, 5:59 pm

DIN

பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை 2,358 மாணவ-மாணவிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தாா். தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்வோருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மருத்துவ படிப்புக்கு மட்டுமன்றி, பொறியியல், சட்டக் கல்லூரி போன்றவற்றிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் இந்த மாவட்டத்தில் ரூ.1.13 கோடியில் 2,358 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இதை மாணவ, மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், பரமக்குடி சாா்-ஆட்சியா் அப்தாப் ரசூல், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உ.திசைவீரன், பரமக்குடி நகா்மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, மாவட்டக் கல்வி அலுவலா் சுதாகா், பள்ளித் தாளாளா் சாகுல்ஹமீது, தலைமையாசிரியா் எம்.அஜ்மல்கான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.