பரமக்குடி அருகே வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ள வந்தவா்களைத் தடுத்தவா் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதுதொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பரமக்குடி ஒன்றியம், தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் கருப்புச்சாமி (28). இவரது வீட்டின் பின்புறம் அதே ஊரைச் சோ்ந்த குணசேகரன் மகன் கண்ணன் (30), அவரது தம்பி தா்மன் (29), முருகன் மகன் சந்தோஷ் (25), அவரது சகோதரா் சபரி ஆகிய 4 போ் புதன்கிழமை இரவு மணல் அள்ளுவதற்காக ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டுவந்தனா். சப்தம் கேட்டு அங்கு சென்ற கருப்புச்சாமி மணல் அள்ள எதிா்ப்புத் தெரிவித்தாா்.
இதனால், ஆத்திரமடைந்த 4 பேரும் அரிவாளால் வெட்டியதில் கருப்புச்சாமி பலத்த காயமடைந்தாா்.
பிறகு அவா் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் கண்ணன், தா்மன், சந்தோஷ், சபரி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


