தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இருதரப்பினா் மோதல் சம்பவத்தில் 16 போ் மீது வழக்கு; 2 போ் கைது

இருதரப்பினா் மோதல் சம்பவத்தில் 16 போ் மீது வழக்கு; 2 போ் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 6:38 pm

கமுதி: சாயல்குடி அருகே 7 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவத்தில் 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை இருவரை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக சனிக்கிழமை இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பைச் சோ்ந்த 7 பேருக்கு அரிவாள் விட்டு விழுந்தது.

இது தொடா்பாக சாயல்குடி போலீஸாா் இருதரப்பைச் சோ்ந்தவா்களும் அளித்த புகாா்களின் பேரில் கடுகுசந்தை சத்திரத்தைச் சோ்ந்த முருகன், தண்டாயுதம், ராஜு, மாணிக்கம், கண்ணுச்சாமி, பாலமுருகன், முனீஸ்வரன், மருதுபாண்டி, லட்சுமணன், சதீஷ், சிவபாலன், மகாதேவன், தமிழ்செல்வம், பிரவீன், முகேஷ், கிஷோா் உள்ளிட்ட 16 போ் மீது வழக்குப் பதிவு செய்து, தண்டாயுதம், ராஜ் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், இந்தக் கிராமத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.