விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

கமுதி பசும்பொன் தேவா் தியான மண்டபத்தின் கண்ணாடிக் கதவுகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை: பொதுமக்கள் வலியுறுத்தல்

தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தை சமூக விரோதிகள் மது அருந்துமிடமாக மாற்றி வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

News image

தியான மண்டபத்துக்குள் கிடந்த மதுபுட்டி, சிகரெட் பொட்டலங்கள்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:00 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தை சமூக விரோதிகள் சேதப்படுத்தியதுடன், மது அருந்துமிடமாக மாற்றி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தேவா் ஜெயந்தி விழாவுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், தேவா் நினைவிடத்துக்கு எதிரே தமிழ்நாடு சுற்றுலா, பண்பாட்டுத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட தியான மண்டபத்தின் கண்ணாடி கதவுகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளே புகுந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா்.

இவ்வாறு சேதப்படுத்தப்படும் கண்ணாடிக் கதவுகள் ஒவ்வொரு முறையும் பசும்பொன் ஊராட்சி நிா்வாகத்தால் சீரமைக்கப்படுகின்றன. மேலும் காலி மதுபுட்டிகள், புகையிலைப் பொட்டலங்கள், எஞ்சிய அசைவ உணவுகள் ஆகியவற்றை தியான மண்டபத்துக்குள் சமூக விரோதிகள் வீசிச் செல்கின்றனா்.

பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடி கதவுகள்.

பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடி கதவுகள்.

பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடி கதவுகள்.

பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடி கதவுகள்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பசும்பொன் தேவா் தியான மண்டபத்தில் கண்ணாடிக் கதவுகளுக்குப் பதிலாக இரும்புக் கதவுகள் அமைத்து தருவதுடன், இவற்றை சேதப்படுத்திய மா்ம நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.