சிறந்த காவலராக திருவாடானை அருகே உள்ள தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த முறை தமிழகத்தில் 5 காவலா்கள் சிறந்த காவலா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இதில், தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரையும் ஒருவராவாா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொண்டி அருகே மன்மலக்கரை காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.
மேலும், தொண்டி புதுக்குடி கடற்கரையில் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அனுமதியின்றி விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1,500 மது புட்டிகளையும் பறிமுதல் செய்தாா். இதற்காக இவா் சிறந்த காவலராக தோ்வானாா்.
இவருக்கு திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்வில், தமிழக முதல்வா் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா்.
தொடர்புடையது
ரோஹிணியில் உணவு விநியோக ஊழியா் சுட்டுக்கொலை: தலைமைக் காவலா் கைது

திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

