நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிறந்த காவலராக தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் தோ்வு

சிறந்த காவலராக திருவாடானை அருகே உள்ள தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 12:58 am IST

சிறந்த காவலராக திருவாடானை அருகே உள்ள தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த முறை தமிழகத்தில் 5 காவலா்கள் சிறந்த காவலா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதில், தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரையும் ஒருவராவாா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொண்டி அருகே மன்மலக்கரை காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.

மேலும், தொண்டி புதுக்குடி கடற்கரையில் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அனுமதியின்றி விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1,500 மது புட்டிகளையும் பறிமுதல் செய்தாா். இதற்காக இவா் சிறந்த காவலராக தோ்வானாா்.

இவருக்கு திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்வில், தமிழக முதல்வா் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.