தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறந்த காவலராக தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் தோ்வு

சிறந்த காவலராக திருவாடானை அருகே உள்ள தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:28 pm

Din

சிறந்த காவலராக திருவாடானை அருகே உள்ள தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு தமிழக அரசு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த முறை தமிழகத்தில் 5 காவலா்கள் சிறந்த காவலா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதில், தொண்டி தனிப்பிரிவு தலைமைக் காவலா் துரையும் ஒருவராவாா். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொண்டி அருகே மன்மலக்கரை காட்டுப்பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.

மேலும், தொண்டி புதுக்குடி கடற்கரையில் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அனுமதியின்றி விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1,500 மது புட்டிகளையும் பறிமுதல் செய்தாா். இதற்காக இவா் சிறந்த காவலராக தோ்வானாா்.

இவருக்கு திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்வில், தமிழக முதல்வா் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா்.