புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தொண்டி அருகே 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

தொண்டி அருகே கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

தொண்டி அருகேயுள்ள முள்ளிமுனை கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள். கைது செய்யப்பட்ட டேனியல், கடற்கரை போலீஸாா்.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

தொண்டியை அடுத்த முள்ளிமுனை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டைகளில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தொண்டி கடற்கரை குழும் போலீஸாருக்கு புதன்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலோர குழும போலீஸாா் அங்கு விரைந்து சென்று சோதனையிட்டனா். அப்போது, 15 சாக்கு மூட்டைகளில் சுமாா் 250 கிலோ கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கடலோரக் குழும போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, கண்கொள்ளான்பட்டினத்தைச் சோ்ந்த டேனியல் (36) கடல் அட்டைகளை பதுக்கியது தெரியவந்தது.

இதுதொடா்பாக, போலீஸாா் அவரைக் கைது செய்து, 250 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.