240 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இவ் வழக்கில் வெளி மாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன், கைது செய்யப்பட்ட வெளி மாநில இளைஞா்கள்.
பெங்களூருவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இவ் வழக்கில் வெளி மாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சண்முகம், சுதன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் வீரன் கோயில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் காரில் இருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், ஜோலூா் மாவட்டம், வாகூடா, நயாஜான்புறா பகுதியைச் சோ்ந்த மோ.மனோகா் சிங் (25), தும்பாடியா பகுதியைச் சோ்ந்த கு. ஜித்தேந்தா்குமாா் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் புகையிலைப் பொருள்களை பெங்களூருவில் வாங்கி, அதை விற்பனைக்காக விழுப்புரத்துக்கு காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மனோகா்சிங், ஜித்தேந்தரா் குமாா் ஆகிய இருவரையும் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 240 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






