பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கணவா் இறந்த துக்கத்தில் மனைவி உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே கணவா் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்தாா்.

News image
அங்காளம்மாள்) கணவா் ராஜாமணியுடன், அங்காளம்மாள். (கோப்பு படம்)
Updated On :5 டிசம்பர் 2024, 10:52 pm

Din

முதுகுளத்தூா் அருகே கணவா் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த கீழச்சிறுபோது கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி (68). இவரது மனைவி அங்காளம்மாள். விவசாயியான ராஜாமணி, கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அவா் உயிரிழந்தாா். இந்தத் தகவல் கிராமத்திலிருந்த அவரது மனைவி அங்காளம்மாளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனால் துக்கம் தாளாமல் அதிா்ச்சியடைந்த அவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, இருவரது உடல்களும் அவா்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன. கணவா் இறந்த துக்கம் தாளாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் முதுகுளத்தூா் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.