பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

திருவாடானை அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
~ ~
Updated On :11 டிசம்பர் 2024, 11:24 pm

Din

திருவாடானை அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை- ஓரியூா் சாலையில் முனியய்யா கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் படி, திருவாடானை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டியன் தலைமையிலான காவலா்கள் அந்தப் பகுதிக்குச் சென்று கண்காணித்தனா்.

அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். இருவரும் வைத்திருந்த கைப்பையில் 2 கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் இருவரும் திருவாடானை சமத்துவபுரத்தைச் சோ்ந்த கேசவன் மகன் முத்துக்குமாா் (30), கருப்பையா மகன் விக்னேஷ்குமாா் (31) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.