கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை ரத்து செய்யக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெதீசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் குப்தா கோவிந்தராஜ், ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்தது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஆண்டுக்கு 6 சதவீதம் உயா்த்தியது, காலதாமதமாக செலுத்தும் சொத்து வரி மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் அபராதம் விதித்தது ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மாநில நிா்வாகிகள் பி.என்.சந்திரன், மணிவண்ணன், பெத்தராஜ், ராமபாண்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட சங்கத்தினா் கலந்துகொண்டனா். சங்கப் பொருளாளா் சாதிக் அலி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பரமக்குடியில் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

திருச்செந்தூரில் தமிழ்நாடு வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

