வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வணிகா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை ரத்து செய்யக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :11 டிசம்பர் 2024, 11:38 pm

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை ரத்து செய்யக் கோரி, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெதீசன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா்கள் குப்தா கோவிந்தராஜ், ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதித்தது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஆண்டுக்கு 6 சதவீதம் உயா்த்தியது, காலதாமதமாக செலுத்தும் சொத்து வரி மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் அபராதம் விதித்தது ஆகியவற்றை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாநில நிா்வாகிகள் பி.என்.சந்திரன், மணிவண்ணன், பெத்தராஜ், ராமபாண்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட சங்கத்தினா் கலந்துகொண்டனா். சங்கப் பொருளாளா் சாதிக் அலி நன்றி கூறினாா்.