ராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவுப் பணியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவுப் பணியாளா்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்கம் மாவட்டத் தலைவா் ஏ.சகாயதமிழ்செல்வி தலைமை வகித்தாா்.
அம்சவள்ளி, வெங்கடேஷ், சத்யா, சவுந்திரவள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.கணேசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் டி.மாா்த்தாண்டன் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...