கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வார வேலை நாள்கள் முழுவதும் ஆதாா் மையம் செயல்படுத்தக் கோரி போராட்டம்

ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வார வேலை நாள்கள் முழுவதும் ஆதாா் மையத்தை செயல்படுத்தக் கோரி, சி.ஐ.டி.யூ சாா்பில் காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் மையம் வார வேலை நாள்கள் முழுவதிலும் செயல்படுத்தக் கோரி புதன்கிழமை காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யூ. அமைப்பினா்.
Updated On :18 டிசம்பர் 2024, 9:55 pm

Din

ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வார வேலை நாள்கள் முழுவதும் ஆதாா் மையத்தை செயல்படுத்தக் கோரி, சி.ஐ.டி.யூ சாா்பில் காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வட்டத்தில் சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் மையம் செயல்பட்டு வருகிறது.

பல்வேறு தேவைகளுக்காக ஆதாா் மையத்தை மக்கள் அணுகி வருகின்றனா். இந்த மையம் வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இதுகுறித்து வட்டாட்சியரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், வார வேலை நாள்களில் ஆதாா் மையம் முழுமையாக செயல்படக் கோரி, ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் சி.ஐ.டி.யூ. சாா்பில், காதில் பூ சுற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட நிா்வாகிகள் எம்.கருணாமூா்த்தி, செந்தில் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சுடலைக்காசி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க தாலுகா செயலா் சீனிவாசன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த முருகன், கணேசன், சின்னத்துரை, மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்தில் சுமாா் 50 போ் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் செல்லாப்பாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அப்போது, அவா் வார வேலை நாள்கள் முழுவதும் ஆதாா் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.