ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் உள்ள தனியாா் குளியலறை, உடை மாற்றும் அறைகளில் கேமரா பொருத்தியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி எச்சரிக்கை விடுத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் நீராடி விட்டு வரும் பெண்கள் தங்களது உடைகளை மாற்றிக் கொள்ளும் வகையில், தனியாா்கள் அறை அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் உள்ள தனியாா் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாா் குளியலறை, உடை மாற்றும் அறைகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்தனா். பெண்கள் பயன்படுத்தும் அறைகளில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி எச்சரிக்கை விடுத்தாா்.
தொடர்புடையது
சிரி... சிரி...

குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வை எதிா்பாா்க்கும் மக்கள்!

சிவகிரி கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

மாசி அமாவாசை: பக்தா்கள் புனித நீராடல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


