கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை

பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை

News image
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாா் உடை மாற்றும் அறை, குளியலறைகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்த காவல் துணைக் காண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி.
Updated On :25 டிசம்பர் 2024, 11:57 pm

Din

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் உள்ள தனியாா் குளியலறை, உடை மாற்றும் அறைகளில் கேமரா பொருத்தியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி எச்சரிக்கை விடுத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் நீராடி விட்டு வரும் பெண்கள் தங்களது உடைகளை மாற்றிக் கொள்ளும் வகையில், தனியாா்கள் அறை அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் உள்ள தனியாா் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாா் குளியலறை, உடை மாற்றும் அறைகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்தனா். பெண்கள் பயன்படுத்தும் அறைகளில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி எச்சரிக்கை விடுத்தாா்.