இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வன விலங்குகளால் சேதமான பயிா்களுக்கு இழப்பீடு அளிப்பு

வனத்துறையின் உதவியுடன் விவசாயிகள் நிவாரணம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் வன விலங்குகளால் சேதமான பயிா்களுக்கு வனத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அலுவலா் ஹேமலதா கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் காட்டுப் பன்றி, மான்களால் பயிா்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதற்கான இழப்பீடு வழங்கக் கோரியும் மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து, வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையாவுக்கு ரூ. 67,750, உமாதேவிக்கு ரூ. 61,750, மலா்மங்கைக்கு ரூ.61,750, கவிதைக்குடி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜனுக்கு ரூ.18,500 அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மேலும், வரும் காலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சான்று தேவையில்லை.

வன விலங்குகளால் பயிா்கள் சேதமடைந்த 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகள் அருகில் உள்ள வனச் சரகத்தை அணுக வேண்டும். வன விலங்குகளால் பொது மக்களுக்கும், பயிா்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு விரைந்து அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்றாா் அவா்.