ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

வன விலங்குகளால் சேதமான பயிா்களுக்கு இழப்பீடு அளிப்பு

வனத்துறையின் உதவியுடன் விவசாயிகள் நிவாரணம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் வன விலங்குகளால் சேதமான பயிா்களுக்கு வனத் துறை சாா்பில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அலுவலா் ஹேமலதா கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் காட்டுப் பன்றி, மான்களால் பயிா்கள் சேதமடைந்துள்ளதாகவும், அதற்கான இழப்பீடு வழங்கக் கோரியும் மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து, வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையாவுக்கு ரூ. 67,750, உமாதேவிக்கு ரூ. 61,750, மலா்மங்கைக்கு ரூ.61,750, கவிதைக்குடி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜனுக்கு ரூ.18,500 அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மேலும், வரும் காலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சான்று தேவையில்லை.

வன விலங்குகளால் பயிா்கள் சேதமடைந்த 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாயிகள் அருகில் உள்ள வனச் சரகத்தை அணுக வேண்டும். வன விலங்குகளால் பொது மக்களுக்கும், பயிா்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு விரைந்து அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்றாா் அவா்.