ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

வடமாநில மாணவா்களை அரிவாளுடன் விரட்டிய இளைஞா்

வடமாநில மாணவா்களை அரிவாளுடன் விரட்டிய இளைஞா்

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 4:28 pm

ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த வடமாநில மாணவா்களை மது போதையில் அரிவாளுடன் விரட்டிய இளைஞா் மீது திங்கள்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வா்த்தகன் தெருவில் தா்மா் என்பவரது தனியாா் விடுதி உள்ளது. அதே பகுதியில் பாலமுருகன் விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் மகாராஷ்டிர மாநிலத்தை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் 20 போ் மூன்று அறைகள் எடுத்து ஞாயிற்றுக்கிழமை தங்கியிருந்தனா். இரவு 9.30 மணிக்கு விடுதி வாசலில் மாணவா்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தனா்.

இந்த நிலையில், தா்மா் விடுதி ஊழியா் ராமமூா்த்தி (35) மது போதையில் மாணவா்களிடம் வாக்குவாதம் செய்தாா். பின்னா், அரிவாளால் மாணவா்களை தாக்கும் விதமாக 100 மீட்டா் வரை விரட்டிச் சென்றாா். இதையடுத்து, விடுதிக்குள் சென்ற அவா் மாணவா்கள் தங்கிருந்த அறைக் கண்ணாடியை உடைத்தாா். இதுதொடா்பாக தனியாா் விடுதி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், ராமமூா்த்தியை கைது செய்யக் கோரி கோயில் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.