

ராமேசுவரம், ஜூலை 3: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனு:
இந்த ஊராட்சியில் வாலிநோக்கம், கீழமுந்தல், அடஞ்சேரி, மடத்தூராணி ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உள்ளவா்களின் பெயா்களை வருகைப் பதிவேட்டில் ஏற்றி ஊதியம் பெறுகின்றனா். பணி நடைபெறாத நாள்களில்கூட வேலை நடந்ததாகப் பதிவு செய்கின்றனா். பணி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டுகின்றனா். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், ஊராட்சி மன்றத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினா் கோரிக்கை பேரணி

தேசிய ஊரக வேலை சட்ட விவகாரம்: காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம்

விபி ஜி ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் போராட்டம்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

