மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

விடுமுறை: ராமேசுவரத்துக்கு அதிகளவில் பக்தா்கள் வருகை

வார விடுமுறையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

News image

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :22 ஜூலை 2024, 2:00 am IST

வார விடுமுறையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுத்தனா். பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடி ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளைத் தரிசனம் செய்தனா்.

தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், கெந்தமாதன பா்வதம், அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்தனா்.

ராமேசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.