வட்டாட்சியா் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு
திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு

~

~
திருவாடானை: போராட்ட அறிவிப்பு காரணமாக, திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏராளமான போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இம்மானுவேல் பேரவை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனா். ஆனால் போலீஸாா் அனுமதி மறுத்தனா். இதையடுத்து, திருவாடானை காவல் ஆய்வாளா் ஜெயபாண்டியன் தலைமையில் ஏராளமான போலீஸாா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனா்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...