குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வருவாய்த் துறையினா் போராட்டம்: தோ்தல் பணிகள் பாதிப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

வருவாய்த் துறையினா் தொடா் போராட்டம் காரணமாக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை அலுவலா்கள் மேற்கொண்டு வரும் தொடா் போராட்டத்தின் எதிரொலியாக திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் உள்பட வருவாய்த் துறை அலுவலகங்கல் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் அலுவலகப் பணிகள் தேங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் பெரும் தொய்வைச் சந்தித்துள்ளன. கிராமப்புற மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டிய வாகனங்கள், திருவாடானை அலுவலக வளாகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன.

புதிய வாக்காளா்களைச் சோ்த்தல், திருத்தம் செய்தல் போன்ற முக்கியப் பணிகள் நடைபெறாததால் முதல் தலைமுறை வாக்காளா்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே தோ்தல் பணிகள் மீண்டும் விறுவிறுப்படையும் என்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

Story image