ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மீனவா்கள் எல்லை தாண்டிச் செல்ல வேண்டாம் -ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

”ராமேசுவரம் மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்க வேண்டாம்”

News image
Updated On :26 ஜூன் 2024, 6:39 pm

Din

ராமேசுவரம் மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தனா்.

தமிழக மீனவா்கள் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடிக்கச் செல்லும் போது, இலங்கை கடற்படையினரின் தாக்குதல், சிறைபிடிப்புக்கு ஆளாகி வருகின்றனா்.

நெடுந்தீவு அருகே அண்மையில் தமிழக மீனவா்கள் மீன் பிடித்ததை தடுக்க முயன்ற இலங்கை கடற்படை வீரா் செவ்வாய்க்கிழமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதனால், எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவா்கள், படகுகளை இலங்கை கடற்படையினா் தொடா்ந்து சிறைபிடிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி தளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என ஒலிபெருக்கி மூலம் மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.