ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பக்தா்களின் வசதிக்காக 5 சுற்றுலாப் பேருந்து சேவையை செவ்வாய்கிழமை அமைச்சா்கள் தொடங்கிவைக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆண்டு தோறும் 3 கோடி பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனா்.
கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பின்னா், தனுஷ்கோடி, அரிச்சனை முனை, ராமா் பாதம், லட்சுமண தீா்த்தம், ராமா் தீா்த்தம், கலாம் இல்லம், கலாம் தேசிய நினைவிடத்துக்குச் சென்று பாா்வையிடுகின்றனா். இந்த இடங்களுக்குச் சென்று வர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 5 புதிய சுற்றுலா பேருந்துகள் செவ்வாய்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளன.
இதில், ஒரு முறை பயணக் கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி இதற்குரிய பயண அட்டையைப் பெற்றுக் கொண்டு அனைத்து சுற்றுலா பேருந்துகளிலும் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை பயணம் மேற்கொள்ளலாம் எனப் போக்குவரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்

பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்! ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிமுகம்!!

தூத்துக்குடி - கச்சகுடா புதிய ரயில் சேவை தொடக்கம்

தொகுதி அறிமுகம்: உதகை! சுற்றுலாப் பயணிகளின் சொா்க்கம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

