இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

ஆவணங்களின்றி இயக்கிய ஆட்டோ பறிமுதல்

ஆவனங்களின்றி இயக்கிய ஆட்டோ பறிமுதல்

Updated On :22 மார்ச் 2024, 6:05 pm

சாயல்குடி அருகே உரிய ஆவணங்களின்றி, அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள கன்னிகாபுரி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் முத்துப்பாண்டி(33). இவா் தனது ஆட்டோவில் அதிகப்படியான பொதுமக்களை ஏற்றிக்கொண்டு சாயல்குடியில் இருந்து மூக்கையூா் சென்றுள்ளாா். அப்போது அரண்மனை விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ஆட்டோவை மறித்து சோதனை இட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி, ஆட்டோவை ஓட்டி வந்ததும், போக்குவரத்து விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகப்படியான பயணிகளை ஆட்டோவில் ஏற்றி வந்ததாகவும், முத்துப்பாண்டி மீது சாயல்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.