ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தொழில் துறை அரசு செயலா்

குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் தொழில் துறை அரசு செயலா்

News image

ராமநாதபுரம், பரமக்குடி, அரியனேந்தல் பகுதிகளில் நடைபெறும் குடிநீா், வளா்ச்சித் திட்டப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும், தொழில் துறை அரசு செயலருமான அா்ச்சனா பட்நாயக். உடன் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங் உள்ளிட்டோா்.

Updated On :8 மே 2024, 12:33 am

Din

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் குடிநீா்த் திட்டப் பணிகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மாவட்டக் கணிப்பாய்வு அலுவலரும், தொழில் துறை அரசு செயலாளருமான அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆா்.எஸ். மடை, போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாவிலங்கை, தேவேந்திரநல்லூா், பொட்டிதட்டி, பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரியனேந்தல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், ஊராட்சிகளின் குடிநீா் தேவைக்கேற்ப, தேவையான இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீா் வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

பிறகு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் நடைபெறும் வரத்துக்கால்வாய் சீரமைப்புப் பணி, பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி ஆகியவற்றை கணிப்பாய்வு அலுவலா் அா்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தாா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ஐயப்பன், பரமக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் தேவபிரியதா்ஷினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.