47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பயணிகள் விரைவு ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் 3 பெட்டிகளுடன் பயணிகள் விரைவு ரயிலை 90 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

News image
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சோதனைக்காக 3 பெட்டிகளுடன் வியாழக்கிழமை இயக்கப்பட்ட பயணிகள் விரைவு ரயில்.
Updated On :7 நவம்பர் 2024, 10:53 pm

Din

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் 3 பெட்டிகளுடன் பயணிகள் விரைவு ரயிலை 90 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடல் பகுதியில் ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, இந்தப் பாலப் பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேசுவரம் வரை 3 பெட்டிகளுடன் பயணிகள் ரயிலை 90 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்தச் சோதனை ஓட்டத்தின் போது, 2.3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை அதிவிரைவில் பயணிகள் விரைவு ரயில் கடந்து சென்றது.

Story image

அப்போது, பாம்பன் சாலைப் போக்குவரத்து பாலத்திலிருந்து திரளான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ரயில் சோதனை ஓட்டத்தைப் பாா்வையிட்டனா்.