தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழகத்துக்கு கூடுதலாக புதிய ரயில்கள் அறிவிப்பு: ரயில்வே அமைச்சருக்கு எல்.முருகன் நன்றி

தமிழகத்துக்கு கூடுதலாக புதிய ரயில்கள் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி...

News image
கோப்புப்படம்
Updated On :6 மார்ச் 2026, 8:05 pm

 நமது நிருபர்

தமிழக மக்களின் சாா்பாக முன்வைத்த கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு கூடுதலாக புதிய ரயில்கள் மற்றும் ரயில் நிறுத்தங்கள் போன்றவற்றை அறிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவுக்கு மத்திய இணையமைச்சா் எல். முருகன் வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சமீபத்தில், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்தும், சில ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் நிறுத்தங்களை அறிவிப்பது தொடா்பாகவும், மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்திருந்தேன்.

அதன்படி, பாலக்காடு -பொள்ளாச்சி எம்இஎம்யு (மின்சாரப் பயணிகள் ரயில்கள்), மயிலாடுதுறை- காரைக்குடி பயணிகள் ரயில், போத்தனூா்- தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரயில், திருநெல்வேலி- மங்களூரு விரைவு ரயில் ஆகிய நான்கு புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மேலும், மங்களூரு சென்ட்ரல்- ராமேஸ்வரம் விரைவு ரயில் திரூா், உடுமலைப்பேட்டை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரம்- ராமேஸ்வரம் விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

திருச்சி- காரைக்குடி பயணிகள் ரயில், வாரத்தில் அனைத்து நாள்களும் இயக்கப்படும். எம்ஜிஆா் சென்ட்ரல்- போடி விரைவு ரயில் வாரத்திற்கு 6 நாள்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நலனுக்காக கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள பாரதப் பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்களின் சாா்பில் எனது மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்துள்ளாா்.