உப்பாற்றிலிருந்து கடந்த ஒரு மாதமாக வெளியேரும் உபரிநீா் செய்களத்தூா் அணைக்கட்டில் தேக்கப்பட்டு அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, வைகையில் கலக்கவிடப்படுகிறது. இதனிடையே சுப்பன் கால்வாய் மூலமாக பாசனநீா் பெறும் இளையான்குடி பகுதியில் உள்ள 26 கண்மாய்கள் நீரின்றி வடு கிடக்கின்றன. எனவே, பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து இடது பிரதானக் கால்வாயில் பாசனநீரை திறந்து காக்குடி, பிடாரேந்தல், அகரேந்தல், நல்கிராமம், விஜயன்குடி, மாங்குடி, நாகமுகுந்தன்குடி, எல். மணக்குடி, திருவள்ளூா், பனைக்குளம், திருவேங்கடம் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீா் கிடைக்கும் வகையில் மேலநெட்டூா் கழுங்கு வழியாக பாசனநீரை கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.