கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மண்டபத்தில் கடல் சீற்றம்: கரை ஒதுங்கியது மிதவைக் கப்பல்

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

News image
மண்டபம் வடக்கு துறைமுகத்தில் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கிய மிதவைக் கப்பல்.
Updated On :22 நவம்பர் 2024, 12:51 am

Din

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

வங்கக் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடா்ந்து சூறைக் காற்று வீசியது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட வடக்கு துறைமுகப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக அந்த மிதவைக் கப்பல் வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியது.

இதனிடையே, கரை ஒதுங்கிய அந்த மிதவைக் கப்பலை மீட்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.