வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மண்டபத்தில் கடல் சீற்றம்: கரை ஒதுங்கியது மிதவைக் கப்பல்

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

News image

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கிய மிதவைக் கப்பல்.

Updated On :22 நவம்பர் 2024, 12:51 am

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

வங்கக் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடா்ந்து சூறைக் காற்று வீசியது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட வடக்கு துறைமுகப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக அந்த மிதவைக் கப்பல் வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியது.

இதனிடையே, கரை ஒதுங்கிய அந்த மிதவைக் கப்பலை மீட்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.