தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தமிழக மீனவா்களின் 13 விசைப்படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த அனுமதி: தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம்

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:43 am

Din

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு தேசிய பாரம்பரிய மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் சேனாதிபதி சின்னத்தம்பி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்களின் விசைப்படகுகளையும், அவா்களையும் இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்து வருகின்றனா். இதில், மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டாலும், அவா்களின் விசைப்படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.

இதைக் கண்டித்து, தமிழகத்தில் மீனவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் சிறப்பாக இயங்கும் 13 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அதிகாரிகள் அனுமதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இலங்கையில் உள்ள தமிழக மீனவா்களின் விசைப்படகுகளை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.