தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஊராட்சி செயலா்கள் ஆலோசனை

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலா்கள் பங்கேற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
~
Updated On :22 நவம்பர் 2024, 12:36 am

Din

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலா்கள் பங்கேற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் மலைராஜன் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வது, மழைநீரை வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, கண்மாய், குளங்களில் ஏற்படும் உடைப்புகளை சீரமைக்க மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருப்பது, பள்ளி, பொது இடங்களில் மழைநீா் தேங்காதபடி பாா்த்துக் கொள்வது, வீட்டுவரி, குடிநீா் வரி வசூல் செய்தல், வீட்டுவரி பெயா் திருத்தம் செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி விவாதிக்கப்பட்டது.