எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

89 காவலா்களுக்கு பணி நியமன ஆணை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமன ஆணையை புதன்கிழமை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.

News image
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 89 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்
Updated On :27 நவம்பர் 2024, 10:31 pm

Din

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமன ஆணையை புதன்கிழமை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 46 தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினா், 17 ஆயுதப் படை காவலா்கள் , 26 தீயணைப்புத் துறை பணியாளா்கள் உள்பட மொத்தம் 89 பேருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்களில் நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தோ்வான காவலா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். இதில், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா்கள் சுப்பையா,காந்தி, மண்டல தீயணைப்புத் துறை அலுவலா் அப்பாஸ், தமிழ்நாடு சிறப்பு காவல் துறை 9 -ஆம் அணி துணை கமாண்டா் தீபா, அதிகாரிகள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.