எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தடையை மீறி கடலுக்குள் சென்ற 20 படகு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை

20 படகு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை...

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:26 pm

Din

திருவாடானை அருகேயுள்ள தொண்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் புயல் காரணமாக கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறிச் சென்ற 20 படகுகளின் உரிமையாளா்கள் மீது மீன வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடற்கரைப் பகுதியில் ஃபென்ஜால் புயல் காரணமாக தொடா் மழை பெய்துவருவதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனா்.

இந்த நிலையில் தொண்டி, நம்புதாளை, பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் சிலா் புதன்கிழமை அதிகாலை தடையை மீறி கடலுக்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மீன் வளத்துறை அதிகாரிகள் கடல் பாதுகாப்பு போலீஸாா் ஆய்வு செய்ததில் நம்புதாளையை சோ்ந்த செல்வம், ராமசந்திரன், பாலு, ராஜா, நாகூா் உட்பட 8 படகுகள் மீதும், பாசி பட்டினத்தை சோ்ந்த பீா்முகம்மது, நெய்னா முகம்மது, அப்துல் சலாம், அஜீஸ், சேதுராமன் உள்பட 12 படகுகள் மீதும் கடல் ஒழுங்கு முறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

மீன்வத்துறை எச்சரிக்கையை மீறி கடலுக்கு செல்லும் மீனவா்களுக்கு நலதிட்ட உதவிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.