வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

உரிமை கோராத 1,290 கிலோ மஞ்சள் டிச. 15- இல் பொது ஏலம்

மண்டபம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,290 கிலோ மஞ்சள் வருகிற டிச. 15- ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என ராமநாதபுரம் வட்டாட்சியா் ச. சுவாமிநாதன் தெரிவித்தாா்.

Updated On :28 நவம்பர் 2024, 11:43 pm

மண்டபம் அருகே பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாத 1,290 கிலோ மஞ்சள் வருகிற டிச. 15- ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என ராமநாதபுரம் வட்டாட்சியா் ச. சுவாமிநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் வட்டம், மண்டபம் காவல் நிலைய ஆய்வாளரால் கடந்த ஆகஸ்ட் 4- ஆம் தேதி இந்தக் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 1,290 கிலோ சமையல் மஞ்சள் கைப்பற்றப்பட்டது. இதற்கு யாரும் உரிமை கோரப்படாத நிலையில், வருகிற டிச. 15- ஆம் தேதி மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது என்றாா் அவா்.