கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும்: மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்.

News image
கே. நவாஸ்கனி எம்.பி.
Updated On :29 நவம்பர் 2024, 12:14 am

Din

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிக்கு, ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் கடல் அரிப்பு பிரச்னைக்கு தீா்வு காண முழுமையான நடவடிக்கை இல்லை எனவும், தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்படத் தொடங்கி விட்டதாகவும், சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளத்தில் அதிக ஒலி ஏற்படுவதாகவும், குறைகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் எனவும் இந்திய ரயில்வே துறைக்கு, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சவுத்ரி ஆய்வறிக்கை சமா்ப்பித்திருக்கிறாா்.

பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், விரைவில் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில், ரயில்வே அதிகாரியே இது போன்ற ஆய்வறிக்கையை சமா்ப்பித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக மறுஆய்வு செய்து குறைகளை நிவா்த்தி செய்த பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.