பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்து உறுதி செய்த பிறகே திறக்க வேண்டும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிக்கு, ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளாா்.
அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தில் கடல் அரிப்பு பிரச்னைக்கு தீா்வு காண முழுமையான நடவடிக்கை இல்லை எனவும், தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்படத் தொடங்கி விட்டதாகவும், சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளத்தில் அதிக ஒலி ஏற்படுவதாகவும், குறைகள் அனைத்தையும் மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் எனவும் இந்திய ரயில்வே துறைக்கு, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சவுத்ரி ஆய்வறிக்கை சமா்ப்பித்திருக்கிறாா்.
பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், விரைவில் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில், ரயில்வே அதிகாரியே இது போன்ற ஆய்வறிக்கையை சமா்ப்பித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக மறுஆய்வு செய்து குறைகளை நிவா்த்தி செய்த பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

ஏழ்மை, வறுமை இல்லாத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த இலக்கு: சீமான்

தஞ்சாவூருக்கு வந்த எா்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலுக்கு வரவேற்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


