47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கஞ்சா கடத்தல் வழக்கில் தேடப்பட்டவா் கைது

தொண்டி அருகே 105 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 6:31 pm

Din

தொண்டி அருகே 105 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எம்.ஆா்.பட்டினம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த

105 கிலோ கஞ்சாவை தொண்டி போலீஸாா் கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றினா். போலீஸாரைக் கண்டதும் வாகனத்திலிருந்தவா்கள் தப்பி ஒடி தலைமறைவாகினா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், கஞ்சா கடத்தலில் தொடா்புடைய சிவகங்கை மாவட்டம், உருவாட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராஜேஷ் (28) சென்னையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.