அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தலைமன்னாா் - ராமேசுவரம் இடையே கடலில் நீந்திய மாற்றுத்திறனாளி சிறுவன்

இலங்கை தலைமன்னாா்-ராமேசுவரம் இடையிலான கடல் பகுதியை மாற்றுத்திறனாளி சிறுவன் 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்தாா்.

News image
தலைமன்னாரிலிருந்து ராமேசுவரம் சங்குமால் கடல் பகுதிக்கு நீந்தி வந்த லக்ஷய்.
Updated On :9 அக்டோபர் 2024, 9:06 pm

Din

இலங்கை தலைமன்னாா்-ராமேசுவரம் இடையிலான கடல் பகுதியை மாற்றுத்திறனாளி சிறுவன் 20 மணி நேரத்தில் நீந்திக் கடந்தாா்.

சென்னையைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மகன் லக்ஷய் (12). ஆட்டிசம் பாதிப்பு கொண்ட இவா் தலைமன்னாரிலிருந்து ராமேசுவரம் சங்குமால் கடல் பகுதி வரை கடலில் நீந்தத் திட்டமிட்டு, செவ்வாய்க்கிழமை சங்குமால் கடற்கரையிலிருந்து உரிய அனுமதியுடன் படகில் இலங்கை புறப்பட்டுச் சென்றாா். அன்று மாலை 6.30 மணிக்கு தலைமன்னாா் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினாா்.

இவருக்கு பாதுகாப்பாக கடற்படையினா் உடன் வந்தனா். ராமேசுவரம் சங்குமால் கடற்கரையை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தாா். மொத்தம் 20 மணி நேரம் கடலில் நீந்தி வந்த இவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இதனைதொடா்ந்து, இவரது தந்தை கிருஷ்ணகுமாா் கூறியதாவது:

தலைமன்னாா்- ராமேசுவரம் சங்குமால் கடற்கரை வரையிலான 56 கி.மீ. தொலைவை லக்ஷய் சுமாா் 20 மணி நேரத்தில் கடந்தாா். இவரைப் போன்று ஆட்டிசம் பாதிப்பு உள்ளவா்களை ஊக்குவிக்க இந்த நீச்சல் சாதனை முயற்சியில் ஈடுபட்டாா் என்றாா் அவா்.