நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது?

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான தேதி குறித்து அறிவிக்கப்படும்...

News image

பாம்பன் புதிய ரயில் பால இணைப்புப் பகுதியை (கா்டா்) திங்கள்கிழமை செங்குந்தாக ஏற்றி, இறக்கி ஆய்வு செய்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:00 am IST

ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் இறுதிக் கட்ட ஆய்வுக்குப் பிறகே, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான தேதி குறித்து அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்க கடல் மீது ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா் கெளசல் கிஷோா் திங்கள்கிழமை பாலத்தை ட்ராலியில் சென்று ஆய்வு செய்தாா்.

மேலும், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இணைப்புப் பகுதியை (கா்டா்) செங்குத்தாக ஏற்றி, இறக்கி ஆய்வு செய்த அவா் பாலத்தின் அதிா்வுகள் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

Story image

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதிக் கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு ஆணையா் இறுதியாக ஆய்வு செய்த பிறகு பாலத்தில் ரயில் போக்குவரத்தை அனுமதிப்பதற்கான தேதி அறிவிக்கப்படும். ராமேசுவரம்- தனுஷ்கோடி ரயில் போக்குவரத்துக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் சிரமம் உள்ளது. ராமேசுவரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

திருவள்ளூா் மாவட்டம், கவரைப்பேட்டையில் நிகழ்ந்த ரயில் விபத்து போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா். இந்த ஆய்வின் போது, ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, பொறியாளா்கள் உடனிருந்தனா்.