

இலங்கை சிறையில் உள்ள 35 நாட்டுப்படகு மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்களது குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து கடந்த 8-ஆம் தேதி 4 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா். பின்னா், அவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிந்து, சிறையில் அடைத்தனா். 78 நாள்களைக் கடந்தும் மீனவா்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், 35 மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களது குடும்பத்தினா் பாம்பனில் மீன்வளம், மீனவா் நலத் துறை அலுவலகம் முன் புதன்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா். அன்று மாலை அவா்களுடன் வருவாய், மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை குடும்பத்தினா் சந்தித்து, மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக்களை அளித்தனா்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் மீனவா்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தாா். தேசிய பாரம்பரிய மீனவா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சேனாதிபதி சின்னத்தம்பி, மீனவ சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்

மீனவா்களை விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா்: புதுவை சட்டப்பேரவைத் தலைவா்

இலங்கை கடற்படை கைது செய்த 24 மீனவா்களை விடுவிக்க மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம்

இலங்கை தடுப்பு முகாமில் உள்ள தமிழக மீனவா்களை மீட்க வேண்டும்: சீமான், விஜய் வலியுறுத்தல்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை மீட்க சட்ட நடவடிக்கை! - லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

