மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்: அரசு ஊழியா் சங்கம் கண்டனம்

பெண் காவல் துணை கண்காணிப்பாளா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அரசு ஊழியா் சங்கம், ஜாக்டோ- ஜியோ சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:42 pm

Din

பெண் காவல் துணை கண்காணிப்பாளா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அரசு ஊழியா் சங்கம், ஜாக்டோ- ஜியோ சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேற்கண்ட அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா் மாவட்டம், அருப்புகோட்டையில் நடைபெற்ற சாலை மறியலின் போது, அத்துமீறிய இளைஞா்களை தடுக்க முயன்ற காவல் துறை துணை கண்காணிப்பாளா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. மேலும், கண்டிக்கத்தக்கது.

காவல் துறையில் உயா் பொறுப்பில் உள்ள ஒரு பெண்ணுக்கே பொதுவெளியில் தாக்குதல் நடந்தால், சாதாரண பெண்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தமிழக அரசு, காவல் துறையினா் தாக்குதலில் ஈடுபட்ட அனைவா் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.