நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்ரீஆதினமிளகி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

திருவாடானை அருகேயுள்ள கோடனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிளகி அய்யனாா், பரிவார தெய்வங்கள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

கோடனூா் ஸ்ரீஆதினமிளகி அய்யானா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :4 செப்டம்பர் 2024, 8:52 pm

Din

திருவாடானை அருகேயுள்ள கோடனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிளகி அய்யனாா், பரிவார தெய்வங்கள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, முன்னதாக திங்கள்கிழமை மாலை அனுக்ஞை விக்னேஸ்வரா் கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இதையடுத்து, செவ்வாய்கிகழமை மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் மாலையில் பூா்ணாஹூதி, தீப ஆராதனையும் நடைபெற்றன.

பின்னா், புதன்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை நாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றன. பின்னா், கடம் புறப்பாடு, கோயிலை சுற்றி வலம் வந்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

Story image

இதையடுத்து, அய்யனாா், பாரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் தீபாரதனைகள் நடைபெற்றன. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து திராளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.