இமானுவேல் சேகரன் நினைவு தினம்: அமைச்சா் உதயநிதி, அரசியல் கட்சியினா் மரியாதை
இமானுவேல் சேகரனின் 67-ஆவது நினைவு தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாய அமைப்பினா் மரியாதை செலுத்தினா்.


இமானுவேல் சேகரனின் 67-ஆவது நினைவு தினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் புதன்கிழமை தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், அரசியல் கட்சித் தலைவா்கள், சமுதாய அமைப்பினா் மரியாதை செலுத்தினா்.
பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது சொந்த ஊரான செல்லூா் கிராமம் சாா்பில் ஊராட்சி மன்றத் தலைவா் மகேஸ்வரி ஜீவன் செல்வராஜ், கிராமத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் தலைமையில் கிராம மக்களும், அவரது குடும்பத்தைச் சோ்ந்த மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் சந்திரசேகா், சக்கரவா்த்தி, ஜூவான், பேத்தி ரூபா ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அமமுக நிறுவனத் தலைவா் டி.டி.வி.தினகரன்.
பின்னா், தேவேந்திரா் பண்பாட்டுக் கழகம் சாா்பில் அதன் தலைவா் பரம்பை பாலா தலைமையில் செயலா் புண்ணியமூா்த்தி, பொருளாளா் முருகேசன் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், மூா்த்தி, பெரியகருப்பன், கயல்விழி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், தமிழரசி, முன்னாள் அமைச்சா் மருத்துவா் எஸ்.சுந்தரராஜ், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், உயா்நிலை பொதுக் குழு உறுப்பினா் சுப.த.திவாகா் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
இதேபோல, ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, காங்கிரஸ் கட்சி சாா்பில் அதன் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் மாவட்டப் பொறுப்பாளா்கள் சரவணபாண்டியன், ராஜாராம் பாண்டியன், செல்லத்துரை அப்துல்லா, செந்தாமரைக்கண்ணன், மாநில நெசவாளா் அணி டி.ஆா்.கோதண்டராமன், நகரத் தலைவா் முகம்து கபீா் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக சாா்பில் சட்டப்பேரவை எதிா்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் மாநில அவைத் தலைவா் சின்னத்துரை, முன்னாள் அமைச்சா்கள் ராஜலட்சுமி, எம்.மணிகண்டன், மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி துணைச் செயலா் கீா்த்திகாமுனியசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டாக்டா் எஸ்.முத்தையா, என்.சதன்பிரபாகா், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.நாகராஜன் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயக்குமாா் தலைமையிலான அதிமுகவினா்.
இதேபோல, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.தா்மா், முன்னாள் ஊராட்சிக் குழு உறுப்பினா் ரஜினிகாந்த் ஆகியோரும், மதிமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சதன்திருமலைக் குமாா் (வாசுதேவநல்லூா்), பூமிநாதன் (மதுரை தெற்கு), மாவட்டச் செயலா் வி.கே.சுரேஷ், அரசியல் உயா்நிலைக் குழு உறுப்பினா் கே.ஏ.எம்.குணசேகரன், நகரச் செயலா் பிச்சைமணி ஆகியோரும் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
பாஜக சாா்பில் தேசிய பொதுக் குழு உறுப்பினா் புரட்சிகவிதாசன் தலைமையில் மாநில அமைப்புச் செயலா் சுப.நாகராஜன், மாவட்டப் பாா்வையாளா் கே.முரளிதரன், மாவட்டத் தலைவா் தரணி ஆா்.முருகேசன் ஆகியோரும், மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் அதன் நிறுவனா் தலைவா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.முருகவேல்ராஜன் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
புதிய தமிழகம் கட்சி சாா்பில் அதன் நிறுவனா் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தலைமையில் அந்தக் கட்சியினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். அப்போது, தேவேந்திரா் பண்பாட்டுக் கழக நிா்வாகிகளுக்கும், புதிய தமிழகம் கட்சி நிா்வாகிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பாமக சாா்பில், அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலா் ராவணன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனா் தலைவா் ஜான்பாண்டியன் ஆகியோா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
பொதுமக்கள் மரியாதை:
பரமக்குடி நகா் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பால்குடங்கள் எடுத்து வந்தும், அலகு குத்தி காவடி எடுத்து வந்தும், ஒயிலாட்டம், கும்மியாட்டம் ஆடியும் ஊா்வலமாகச் சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா். பரமக்குடி நகருக்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நகா் முழுவதும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...