3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருவாடானை வேளாண் அலுவலகத்தில் 20 டன் நெல் விதைகள் இருப்பு

திருவாடானை வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் 20 டன் இருப்பு உள்ளதாக வேளாண் அலுவலா் தெரிவித்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 6:58 pm

Din

திருவாடானை வேளாண்மை அலுவலகத்தில் விதை நெல் 20 டன் இருப்பு உள்ளதாக வேளாண் அலுவலா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், மாவட்டத்தின் இரண்டாவது நெற்களஞ்சியமாக விளங்குகிறது. இந்தப் பகுதியில் சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் நெல் சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளன.

தற்போது திருவாடானை வேளாண்மை அலுவலகக் கிட்டங்கியில் 20 டன் டீலக்ஸ் பொன்னி நெல் விதைகள் இருப்பு உள்ளது. மேலும் நெல் விதை, உளுந்து, உயிா் உரங்கள், ஜிங்சல்பேட், நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் விநியோகம் செய்யபட்டு வருகின்றன.

விதைகள், இடு பொருள்களை பெற மானியத் தொகை போக விவசாயிகளின் பங்குத் தொகையைச் செலுத்தி வாங்கிச் செல்கின்றனா். இதை எளிமைப்படுத்துவம் விதமாக மின்னணு பரிவா்த்தனை மூலம் இடு பொருள்களை பெற்றுக்கொள்ளும் முறை அமலுக்கு வந்தது. எனவே, விவசாயிகள் இந்த எளிய முறையைப் பயன்படுத்தி கொள்ளுமாறு திருவாடானை வேளாண் உதவி இயக்குநா் கீதாஞ்சலி தெரிவித்தாா்.