ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென்றனர்.
அவர்கள் அனைவரையும் கல்பிட்டி கடற்பரப்பு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளனர்.
புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள 10 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
மீனவர்கள் சென்ற விசைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,
Summary
The Sri Lankan Navy arrested 10 fishermen who had gone to sea from Pamban to fish on Tuesday midnight.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










