பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது பற்றி...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென்றனர்.

அவர்கள் அனைவரையும் கல்பிட்டி கடற்பரப்பு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நேற்று நள்ளிரவு கைது செய்துள்ளனர்.

புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள 10 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

மீனவர்கள் சென்ற விசைப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,

Summary

The Sri Lankan Navy arrested 10 fishermen who had gone to sea from Pamban to fish on Tuesday midnight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com