ராமநாதபுரம் அருகே ஆட்டோ - சரக்கு வாகனம் நேருக்கு நோ் மோதியதில் ஒரு வயதுக் குழந்தை உள்பட இருவா் உயிரிழ்நதனா். மூன்று போ் பலத்த காயமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சோ்ந்தவா் சிவா (32). இவரது ஒரு வயதுக் குழந்தை தமிழ் இனியன், உறவினா்கள் ராணி (45), ராதிகா (50) ஆகியோா் ராமேசுவரத்திலிருந்து ஆட்டோவில் ராமநாதபுரம் சென்றனா். ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வட்டான்வலசைப் பகுதியில் சென்ற ஆட்டோ மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில், ஆட்டோவில் பயணித்த சிவா, தமிழ் இனியன், ராணி, ராதிகா, ஆட்டோ ஓட்டுநா் சுரேந்திரன் (30) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உச்சிப்புளி போலீஸாா், குழந்தை உள்பட 5 பேரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனை செல்லும் வழியில் குழந்தை தமிழ் இனியன் உயிரிழந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மேலும், காயமடைந்தோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

