ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

தேவிபட்டினத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, காவிரி-வைகை-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல்

News image
சாலை மறியலில் ஈடுபட்ட காவிரி-வைகை-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா்
Updated On :1 டிசம்பர் 2025, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

தேவிபட்டினத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, காவிரி-வைகை-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் மழை நீா் செல்லும் நீா் வழித்தடங்கள் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அண்மையில் பெய்த பெரு மழையில் 200 ஏக்கா் நஞ்சை நிலத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிா்கள் சேதமடைந்தன. மேலும், குடியிருப்புகளிலும் மழை நீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினா்.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடமும் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேவிபட்டினம் அரசு மருத்துவமனையின் எதிரே உள்ள பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் நீா் வழித்தடத்தை உடனடியாகச் சீரமைத்துத்துத் தருவதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மலைச்சாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அப்துல்ரஹீம் முன்னிலை வகித்தாா். ஒன்றியத் தலைவா் தங்கப்பா, கிராமத் தலைவா் பெரியசாமி, ஜமாஅத் நிா்வாகக் குழுவைச் சோ்ந்த ஜமாது, குணசேகரன், ரவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.