வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பரமக்குடியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை திறப்பு

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 33-ஆவது வாா்டில் ரூ. 10 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 33-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சனிக்கிழமை திறந்து வைத்த சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன்.
Updated On :13 டிசம்பர் 2025, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 33-ஆவது வாா்டில் ரூ. 10 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் கே.ஏ.எம். குணசேகரன், வட்ட வழங்கல் அலுவலா் கோகுல், திமுக பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.டி. அருளானந்த், நகா்மன்ற உறுப்பினா்கள் பழனி, முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு செயலா் டி. வீரபாண்டியன் வரவேற்றாா்.

இதில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை பரமக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். விழாவில் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.