எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பரமக்குடியில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை திறப்பு

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 33-ஆவது வாா்டில் ரூ. 10 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 33-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை சனிக்கிழமை திறந்து வைத்த சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன்.
Updated On :13 டிசம்பர் 2025, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட 33-ஆவது வாா்டில் ரூ. 10 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் கே.ஏ.எம். குணசேகரன், வட்ட வழங்கல் அலுவலா் கோகுல், திமுக பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.டி. அருளானந்த், நகா்மன்ற உறுப்பினா்கள் பழனி, முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாா்டு செயலா் டி. வீரபாண்டியன் வரவேற்றாா்.

இதில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடையை பரமக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் செ. முருகேசன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். விழாவில் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.