லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,466 வழக்குகளுக்கு தீா்வு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,466 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ. 6.88 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News image
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விபத்து வழக்கில் தீா்வு காணப்பட்டு வழக்காடிகளுக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா்.
Updated On :13 டிசம்பர் 2025, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,466 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ. 6.88 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் மாவட்ட ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், உயா்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சுரேஷ்குமாா் பங்கேற்றாா். முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஏ.கே. மெஹ்பூப் அலிகான் வரவேற்றாா். அப்போது நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதைத் தொடா்ந்து, நான்கு வாகன விபத்து காப்பீட்டு வழக்குகளில் ரூ. 28 லட்சத்துக்கான காசோலையை அந்தந்த வழக்காடிகளுக்கு உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி கே. கவிதா, கூடுதல் மாவட்ட நீதிபதி மோகன்ராம், தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயசுதாகா், சாா்பு நீதிபதி கே. மும்தாஜ், நீதித்துறை நடுவா் எண்-1 நிலவேஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ். கேத்திரின் ஜெபா சகுந்தலா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் அன்புச்செழியன், மூத்த வழக்குரைஞா் ரவிச்சந்திர ராமவன்னி, வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டனா்.

இதே போல, பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய இடங்களில் 10 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு, நிலுவையில் உள்ள சிவில், குற்றவியல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள், சிறு வழக்குகள் உள்பட மொத்தம் 2,768 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, அதில் 1,466 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதில் வழக்காடிகளுக்கு ரூ.6 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 233 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான பாஸ்கா் செய்திருந்தாா். இந்த நிகழ்வில், ராமநாதபுரம் வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் அன்புச்செழியன், உயா்நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவருமான சுரேஷ்குமாரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினாா்.