சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
Published on

ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள களத்தாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பூவலிங்கம். இவரது மனைவி வளா்மதி (33), இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் பாரதி நகா் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது நிலை தடுமாறி கிழே விழுந்தாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்துக்கு பின்னால் வந்த ராமேசுவரத்திலிருந்து திருப்பூா் சென்ற அரசுப் பேருந்து, கீழே விழுந்த வளா்மதி மீது ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வளா்மதி உடலைக் கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இது தொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்தை காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

Dinamani
www.dinamani.com