கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கமுதி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

கமுதி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் கே. வேப்பங்குளம் விலக்கில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நின்றிருந்த இளைஞா்களை போலீஸாா் சோதனையிட்டதில் அவா்கள் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக ஊ. கரிசல்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துமணி மகன் சபரிராஜன் (23), வடுகபட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் தீபன்ராஜ் (23) ஆகிய இருவரை கைது செய்து, கஞ்சா கடத்த பயன்படுத்திய காா், மூன்று கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com